நாம் ஆங்கில அடிமைகள் என்பதை வெளி காட்டும் செயல்களில் இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் ஒன்று . கேட்டால் இது உலகில் பொதுவாக நடை முறையில் பயன்படுத்தும் நாட்காட்டி (காலேண்டர்) முறை, அதன் முதல் மாதம் ஜனவரி 1 அதை நாங்கள் கொண்டாடுகிறோம் என்ற பதில். இந்த ஆங்கில காலேண்டர் என்பது ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பு நாம் பயன்படுத்திய நாட்காட்டி முறையின் முதன் நாள் சித்திரை 1 (ஏப்ரல் 14). அதை இன்று தமிழ் புத்தாண்டு என்று அழைக்கிறோம் .
மற்ற நாடுகளில் ஆங்கிலேய காலேண்டர் முறை உலக வர்த்தக நடைமுறைக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது .எந்தந்த நாடுகளில் சரியான காலேண்டர் பயன்பாட்டில் இல்லையோ அந்த நாடுகள் ஆங்கிலேய காலேண்டர் முறையை பொதுவாக பயன்படுத்துகிறார்கள் . பாரம்பரிய நாடுகளான சீனா , ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் புத்தாண்டாக அவர்கள் பாரம்பரிய நாட்காட்டி முறையின் முதல் தேதியை அறிவித்து உள்ளன . ஆனால் இந்தியாவில் ?????, இந்த ஆங்கில புத்தாண்டு இன்று விமர்சையாக கொண்டப்படுவது ஆங்கிலேய மோகம் கொண்ட நாடுகளில் தான்.
நாமும் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் , இரவு முழுவதும் விழித்து தண்ணியடித்து , வாழ்த்து செய்திகள் பரிமாறி கொண்டாடுகிறோம் . நம்மை அடிமைபடுத்திய அங்கிலேயரின் புத்தாண்டை ஏன் கொண்டாடுகிறோம் ?.
" இல்லை ! இல்லை ! முட்டாள்தனமாக பேசாத !நாங்கள் பொதுமை சிந்தனை உடையவர்கள் ,ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவோம் " என்றால் , இதையும் கொண்டாடுங்கள் , பொதுமை சிந்தனை உடையவர்களே !!!
நிதி ஆண்டின் புத்தாண்டு - 1 ஏப்ரல் .
கல்வி ஆண்டின் புத்தாண்டு - 1 ஜூன் .
இஸ்லாமியர்களின் புத்தாண்டு - மொகரம் நாள்
புத்தர்களின் புத்தாண்டு - ஏப்ரல் மாதம்.
தமிழர்களின் புத்தாண்டு - 14 ஏப்ரல்
இன்னும் பல..........................
அணைத்து நாடுகளின் / சமயங்களின் புத்தாண்டு தினத்தன்று மக்கள் தங்கள் வழிப்பாட்டு தளங்களுக்கு செல்வார்கள் ,ஆனால் ஆங்கிலேயன் மட்டும் முதலில் தன் புத்தாண்டை கொண்டாட தண்ணியடிப்பன் . இந்த காட்டுமிராண்டிகள் தான் நவீன உலகின் கலாச்சார விடி வெள்ளிகள் !!!!!!
இவை அனைத்தும் அறிந்தும் அடுத்த ஆங்கில புத்தாண்டை நாம் கொண்டாடுவோம் .
ஏன் என்றால் ?
நாம் ஆங்கில அடிமைகளாக பிறக்கிறோம் !
நாம் ஆங்கில அடிமைகளாக வாழ்கிறோம் !
நாம் ஆங்கில அடிமைகளாக சாகிறோம் !
No comments:
Post a Comment